Friday, May 6, 2011

லஞ்சம், ஊழல் என்றால் என்ன?

முதலில் ஊழல் என்றால் என்ன? எது ஊழல்? என்பவை குறித்து தெளிவான புரிதல்கள் இருக்க வேண்டும்.
மக்களின் வரி பணத்தை திட்டங்கள் என்ற பெயரில் சுருட்டுவது .
திட்டங்களை நிறைவேற்ற சரியான அணுகுமுறை இல்லாமல் உதறிதனமாக பொறுப்பற்று சுயலாபம் கருதி செய்வது
தற்போது நடப்பில் இருக்கும் சட்ட விதிமுறைகளை மீறிச் செயல்படுவது
அல்லது சாராம்சத்தில் மக்களின் வாழ்வாதாரத்தில் தீயகுறுக்கீடு செய்யும் அனைத்தும் ஊழல்
எடுத்துக்காட்டாக தற்போது பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும்போது மொத்த முதலீட்டைவிட அதிகமான அளவில் சலுகைகளும் வரி விலக்குகளும் அரசால் அளிக்கப்படுகின்றன.
நியாயப்படி இந்த ஒட்டுமொத்த அனுமதியே ஊழலாக கருதப்பட வேண்டும். ஆனால், அரசு செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் ஷரத்துகளில் ஏதேனும் விதிமீறல்கள் நடந்திருக்கிறதா என கண்காணித்து நடந்திருக்கும் பட்சத்தில் அதை மட்டும் ஊழல் என்பதா? சந்தை விலையில் 7000 மதிப்புள்ள இரும்புத்தாதுவை வெறும் 27 ரூபாய்க்கு எடுத்துச் செல்ல அனுமதிப்பது ஊழல்.
அரசு நியமிக்கும் ஒரு குழுவால் ஊழலை என்ன செய்துவிட முடியும்

லஞ்சம் என்றால் என்ன - காரியம் அரசு அலுவலகங்களில் நடக்க , அரசு வழக்கும் சான்றிதழ் மற்றும் அரசு கொடுக்கும் நலத்திட்டங்களை பெற அதிகாரிகள் வாங்கும் சன்மானம் (பிச்சை எடுகிற பொலப்பு ) .
எடுத்துக்காட்டாக:ஒரு கிராமத்தில் வாழும் ஒருவருக்கு இரண்டு பிள்ளைகள். எதிர்பாராதவிதமாக பிறக்கும்போதே இரண்டு பேரும் ஊனமுற்றவர்களா பிறந்துவிட்டார்கள்.. மூளை வளர்ச்சி குன்றிய முதல் மகனையும், வாய்பேச இயலாத இளைய மகனையும் நல்லமுறையில் வளர்ப்பதற்கு அரசின் ஊனமுற்றோரின் உதவித்தொகை அவர்களுக்குதேவைப்பட்டது.

அதற்காக தன்னுடைய மகன்களுக்கு ஊனமுற்றோர் சான்றிதல் பெற அதற்கான அலுவலகத்திற்கு அவங்க தாயார் போனாங்க. அந்த அலுவலரோ, சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றது மட்டுமல்லாமல், அரசு வழங்கும் உதவித்தொகை மாத மாதம் சிறிது லஞ்சமாக பெற்றபிறகே வழங்கிஇருக்கிறார். இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் அந்த அலுவலரும் ஒரு ஊனமுற்றவரே.

லஞ்சம் ஒழிக்கப்படவேண்டும் என்றல் ஊழல் செய்பவர்களை துக்கில் போட சட்டம் கொண்டுவரவேண்டும்

Friday, April 1, 2011

Monday, March 21, 2011

சட்டசபை தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சிக்கு மோதிரச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.


தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடக்கிறது. அதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக உள்ளது. தற்போது கட்சிகளுக்கான சின்னங்களை ஒதுக்கியுள்ளது. அதன்படி இந்திய ஜனநாயக கட்சிக்கு மோதிரச் சின்னம் ஒதுக்கியுள்ளது. இந்த தகவல் அக்கட்சியின் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய ஜனநாயக கட்சி மோதிரச் சின்னத்தில் போட்டியிடும்
123 தொகுதிகளில் போட்டி: பாரிவேந்தர்


இந்திய ஜனநாயக கட்சி 123 தொகுதிகளில் போட்டியிடுகிறது என, அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சியுடன் யாதவ மகாசபை கட்சி தலைவர் தேவநாதன், சமூக சமத்துவ படை கட்சி தலைவர் சிவகாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், தமிழ்நாடு வாணிய செட்டியார் பேரவை கட்சி தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்கள்.

இந்த கூட்டணிக்கு இந்திய ஜனநாயக முன்னணி என்று பெயரிடப்பட்டுள்ளது. அசோக்நகரில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி அலுவலகத்தில் தலைவர் பாரிவேந்தர் தலைமையில் இக்கூட்டணியினர் ஒன்றாக கூடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பாரிவேந்தர் கூறுகையில், எங்கள் அணியில் 234 தொகுதியிலும் போட்டியிடுகிறோம். இதில் இந்திய ஜனநாயக கட்சி 123 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கும் 23 தொகுதிகள் எங்கள் அணியில் பிரித்து கொடுக்கப்படும்.

இதேபோல் யாதவ மகா சபை கட்சி 88 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்து கிறது. இதில் ஜான்பாண்டி யனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் தொகுதிகளில் பகிர்ந்து வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. 10 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த உள் ளோம். ஒரே மேடையில் நாங்கள் பேசுவோம் என்றார்.

பின்னர் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் 123 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாரிவேந்தர் அறிவித்தார். பின்னர் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

Wednesday, March 2, 2011

பெரம்பலூரில் விவசாயிகள் மாநாடு: ஐ.ஜே.கே

பெரம்பலூரில் விவசாயிகள் மாநாடு

ஐஜேகே: 25 வேட்பாளர்கள் பட்டியல்


இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே) சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநில மாநாடு பெரம்பலூரை அடுத்த வல்லாபுரம் கைகாட்டி அருகே நேற்று நடந்தது.

இதில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பச்சமுத்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு உருவபடத்தை திறந்து வைத்து பேசினார்.




மாநாட்டில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்கட்டமாக பெரம்பலூர், திருச்சி, அரியலூர், குன்னம், லால்குடி, கும்பகோணம், ஸ்ரீரங்கம் உள்பட 25 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பச்சமுத்து வெளியிட்டார். அவர்கள் விவரம் வருமாறு:-

விருத்தாசலம்- ஆர்.கிருஷ்ணமூர்த்தி, குன்னம்- பி.ஜெயசீலன், அரியலூர்-சி.பாஸ்கர், லால்குடி- டாக்டர் பார்க்கவன் பச்சமுத்து, நெல்லை- எஸ்.மதன், திருச்சி கிழக்கு- எஸ்.டி.தங்கவேல், புதுக்கோட்டை- கே.பி.என்.சீனிவாசன், திருவையாறு- ஜி.முத்துக்குமார், ஸ்ரீரங்கம்- தமிழரசி, காரைக்குடி- எஸ். ஆசைத்தம்பி, திருவெறும்பூர்- எட்வின் ஜெரால்டு, துறையூர் (தனி)- க.சிங்காரம், முசிறி- பன்னீர்செல்வம், திருச்சி மேற்கு- கே.டி.அம்புரோஸ், மண்ணச்சநல்லூர்- டி.ஆர்.சீனிவாசன், குளித்தலை- சித்ராசுப்ரமணியன், சிவகங்கை- சி.குழந்தைசாமி,

உளுந்தூர்பேட்டை- வக்கீல் சுரேஷ், திருவாடானை- வி.ஆர்.போஸ், பெரம்பலூர் (தனி)- எம்கே.ரெங்காஸ், மைலாப்பூர்- எஸ்.எஸ்.வெங்கடேசன், தியாகராயநகர் - சு.பா.முத்துபாரதி, பாளையங்கோட்டை- லட்சுமணன், கும்பகோணம் - தட்சிணாமூர்த்தி, ஜெயங்கொண்டம் - ஜி.ராமச்சந்திரன்.

மேலும் இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Wednesday, February 2, 2011

IJK Perambalur vivazaikal manadu

IJK


பெரம்பலூரில் விவசாயிகள் மாநாடு: ஐ.ஜே.கே





இந்திய ஜனநாயக கட்சி நடத்தும் விவசாயிகள் மாநாடு பெரம்பலூர் ரோவர் விவசாயக் கல்லூரி அருகே வருகிற 26 ந்தேதி நடக்கிறது.

இதுகுறித்து இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மே 29ந் தேதி திருச்சியில் 7 லட்சம் பேர் திரண்ட மாநாட்டில் உதயமானது இந்திய ஜனநாயக கட்சி. அனைவருக்கும் அரசியலில் வாய்ப்பு, இளைஞர்களுக்கு உரிய பங்கு, உயர்தர கல்வி, மேம்பட்ட சுகாதாரம் விவசாயத்தில் விஞ்ஞானம், ஆகியவற்றை நிலைநாட்ட இந்திய ஜனநாயக கட்சி இளைஞர்களின் எதிர்காலத் திற்காக உருவாக்கப்பட்டது என கூறியவர் கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர். பல்வேறு அரசு திட்டங்களில் உள்ள குறைகளை களையக்கோரி பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் தெருமுனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி இந்திய ஜனநாயக கட்சி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்திய அளவில் எதிர்கால இளைஞர்களின் வழிகாட்டியாகவும் திகழும் என்ற நம்பிக்கை விதையை மக்கள் மனதில் விதைத்து வருகிறது ஐ.ஜே.கே. இன்று விவசாயம் மிகவும் பரிதாபத்திற்குரிய ஒரு தொழிலாக ஆகிவிட்டது. இந்த நிலையில் அரசியலில் மட்டும் அல்ல விவசாயத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று தொலைநோக்கு வளர்ச்சி திட்டங்களை ஐ.ஜே.கே. முன்வைக்கிறது. இதற்காக விவசாயிகள் அனைவரும் பெரம்பலூரில் வருகிற 26ந் தேதி அணி திரள்கிறார்கள். இந்திய அளவிலும், தமிழக அளவிலும் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்.

பொறியியல் கல்லூரி களுக்கு இணையாக வேளாண் கல்லூரிகள் தொடங்கப்பட்டு கிராமங்கள்தோறும் வேளாண் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு உறுதிபடுத்த வேண்டும். விவசாய விளை பொருள்களுக்கு ஆதாய விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாள் வேலை திட்டமாக மாற்றி அதை முழுமையாக தனியார் விவசாய வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் உள்பட 12 வேளாண் கொள்கைகளை வலியுறுத்துகிறது.இந்த மாநாட்டில் 10 லட்சம் பேரை திரட்டி விவசாயத்திற்கு விடிவு காலத்தை ஐ.ஜே.கே. உருவாக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.